ஆட்டோ மோதி பெண் பரிதாப சாவு.குடிபோதையில் இருந்த டிரைவர் கைது

கோவை ஜூன் 20 கோவை மதுக்கரை அருகே உள்ள எட்டி மடை, அருந்ததியர் வீதியைச் சேர்ந்தவர் மாரிசாமி. இவரது மனைவி பூவம்மாள் ( வயது 51) இவர் நேற்று சித்தாபுதூர் வி .கே கே மேனன் ரோட்டில் உள்ள அரசு பள்ளிக்கூடம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாகவேகமாக வந்த ஒரு ஆட்டோ பூவம்மாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார். இது குறித்து கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார் .இது தொடர்பாகபுது சித்தாபுதூர், அன்னபூர்ணா லேஅவுட் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தங்கவேல் (வயது 57) கைது செய்யப்பட்டார். இவர் குடிபோதையில் ஆட்டோ ஓட்டியது விசாரணையில் தெரியவந்தது .இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்