கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவியர்கள் மற்றும் உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை பாராட்டி கௌரவிக்கும் வகையில் அரசுப்பணி ஓய்வு பெற்ற சென்னையை சேர்ந்த ஊழியர்கள் ஒருங்கிணைந்து தொடங்கப்பட்ட அறக்கட்டளை சார்பாக பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவியர் அனுபிரபா, பாவனா மற்றும் ரிதன்யா ஆகியோருக்கு பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் அறக்கட்டளையின் உறுப்பினர் அதிசய மணி பரிசுத்தொகை வழங்கி பாராட்டு சான்றிதழ் வழங்கியதோடு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவித்தார் இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்களும், மாணவியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0