கோவை.ஜூன் 28 கோவை கவுண்டம்பாளையம், கருப்பசாமி நகரை சேர்ந்தவர் ராஜரத்தினம் ( வயது 81 7இவர் நேற்று மேட்டுப்பாளையம் ரோடு துடியலூர் ரோடு சந்திப்பில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது .இவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து இவரது மகன் பிரதாப் குமார் கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0