கோவில் அருகே கஞ்சா விற்பனை..!

கோவை ஆர் .எஸ் . புரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அய்யாசாமி நேற்று சீரநாயக்கன்பாளையம் சுகர் கேன் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள வீரபத்திரன்கோவில் அருகே சந்தேக படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 300 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன . இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணை அவர் சீரநாயக்கன்பாளையம் ஜீவரத்தினம் வீதியை சேர்ந்த சுரேஷ்குமார் மகன் ஹரி பிரசாத் என்ற இரண்டு கிலோ ( வயது 24 )என்பது தெரியவந்தது .இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்