கோவை செப்டம்பர் 8 கோவை கணபதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 50) ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 4 – ந் தேதி மாலையில் தனது ஆட்டோவில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிர்புறம் உள்ள ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த தனியார் பஸ் , ஆட்டோ மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பிரேம் குமார் சிகிச்சைக்காகஅரசு மருத்துவ மருத்துவமனை சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0