கோவை செப்டம்பர் 6 கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள காளம் பாளையத்தைச் சேர்ந்தவர் அங்கண்ணன் ( வயது 85) இவரது மனைவி சுந்தராம்பாள் (வயது 65) இவர்கள் நேற்று முன்தினம் இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென 2 பேர் வீட்டினுள் புகுந்தனர் .பின்னர் வயதான தம்பதியிடம் பணம் மற்றும் நகை கேட்டு மிரட்டினர். ஆனால் அவர்கள் அதற்கு மறுத்தனர். இதனால்ஆத்திரம் அடைந்த 2 பேரும் அந்த வயதான் தம்பதிகளை தாக்கி சுந்தராம்பாள் அணிந்திருந்த தங்க கம்மலை பறித்துவிட்டு தப்பி சென்று விட்டனர் .இது குறித்து காரமடை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் சந்தோஷ் குமார் (வயது 30) டிரைவர் மனோஜ் குமார் (வயது 31) ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து கம்மல் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது..

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0