கோவை அக்டோபர் 8 கோவை சுகுணாபுரம் மாட்டுக்கார கோவில் வீதியைச் சேர்ந்தவர் பிரதீப் . இவரது மனைவி ஞானஸ்ரீ ( வயது 24)நேற்று இவர் தனது தாயார் சாந்தியுடன் (வயது 48) ஸ்கூட்டரில் குனியமுத்தூர் பி.கே. புதூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார் .திடீரென்று நிலை தடுமாறி ரோட்டில் உள்ள தடுப்புச் சுவரில் ஸ்கூட்டர் மோதியது. இதில் ஸ்கூட்டர் ஓட்டி வந்த ஞான ஸ்ரீ அவரது தாயார் சாந்தி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.. இவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இருவரும் இறந்தனர். இது குறித்து மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0