கள்ளத்தொடர்பை கண்டித்த ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து

நண்பர் கைது.கோவை செப்டம்பர் 3 கோவை சீரநாயக்கன்பாளையம் ,இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் கங்காதரன். இவரது மகன் கணேசன் ( வயது 27 )ஆட்டோ டிரைவர்.இவரும்வீரகேரளம் ,தேவர் வீதியை சேர்நத சந்தோஷ் ( வயது 27) என்பவரும் நெருங்கிய நண்பர்கள் . சந்தோஷ் குமார் ஒரு பெண்ணிடம் கள்ள தொடர்பு வைத்திருந்தாராம். இதை கணேசன் கண்டித்தார் இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார் கத்தியால் கணேசனை வயிற்றில் குத்தினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆர் .எஸ் . புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் குமாரை கைது செய்தார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.