கோவை செப்டம்பர் 19கோவை இருகூர் அருகே உள்ள ராவுத்தூர் தரை பாலம் அருகே தண்டவாளத்தில் கடந்த 14- ஆம் தேதிஒரு ஆண் குழந்தை பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு 2 வயது இருக்கும். இதுகுறித்து போத்தனூர் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் அந்த குழந்தையின் உடல் அருகே மஞ்சள் குங்குமம், வெட்டப்பட்ட கோழியின் உடல், ரத்தம் ஆகியவை கிடந்ததது .இதனால் அந்த குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதாக தகவல் பரவியது. 2 வயது குழந்தை தண்டவாள பகுதிக்கு நடந்து செல்ல வாய்ப்பு இல்லை. எனவே அந்த குழந்தை நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம்என்று கூறப்பட்டது.இதை அறிந்த போதனூர் ரயில்வே போலீசார் விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த குழந்தை எப்படி உயிரிழந்தது? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூரை சேர்ந்த 6 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0