கோவை ஜூன் 11 கோவை பீளமேடு, சிவில் விமான நிலையம் ரோட்டில் உள்ள பி ,எம் .ஆர் லேஅவுட் சேர்ந்தவர் செந்தில் .இவரது மனைவி அபிராம சுந்தரி .இவருடைய தாயார் நாகரத்தினம் ( வயது 80 )இவர் நேற்று அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து மகள் அபிராம சுந்தரி பீளமேடு போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர்அருள் பெருமாள் வழக்கு பதிவு செய்து மர்ம ஆ சாமிகளை தேடி வருகிறார்.இதே போல இருகூர், காந்திநகர் முத்துராமலிங்க தேவர் வீதியை சேர்ந்தவர் மோகன் இவரது மனைவி ஜென்னி (வயது 23) இவர் நேற்றுஅங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார் அப்போது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த 4 பவுன்தங்க செயினை பறித்துவிட்டு தப்பி சென்று விட்டனர் .இது குறித்து ஜென்னி சிங்காநல்லூர் போலீசில்புகார் செய்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் கபில் ராஜ் வழக்கு பதிவு செய்து மர்ம ஆ சாமிகளைதேடி வருகிறார்.இந்த 2வழிப்பறியை ஒரே கும்பல் தான் நடத்தி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0