கோவை: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் கே . எஸ். ராஜு ,அவரது மகன் சக்கரபாணி ( வயது 38 )இவர் கோவை பீளமேடு ,எல்லை தோட்டம் பகுதியில் தங்கி இருந்து அங்குள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை விட்டு பிரிந்து கடந்து 2 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார். இதனால் மன அழுத்தத்தோடு காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவரதுஅவரது தாயாருக்கு செல் போனில் பேசிவிட்டுதங்கியிருந்த வீட்டில்வேட்டியை விட்டதில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாயார் கோமதி பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






