வீடு வாங்கித் தருவதாக 1.32லட்சம் மோசடி.பெண் மீது புகார்

கோவை ஜூலை 11 கோவை செல்வபுரம் தெற்கு அவுசிங் யூனிட் பகுதியில் தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டுவளர்ச்சி அலுவலகம் உள்ளது.இதன் அலுவலகத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருபவர் சரண்யா.இவர்தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வளர்ச்சி கழகத்தின் சார்பில்எழில் நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டை வாங்கி தருவதாக கூறி ஒரு பெண்ணிடம் ரூ.1,32,000 வாங்கி இருந்தார் அந்த பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இது குறித்து அதன் நிர்வாக இன்ஜினியர் ஜீவானந்தம் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து சரண்யாவை தேடி வருகிறார்கள்.