கோவைக்கு ரயிலில் வரும்பயணிகளைஆட்டோவில் கடத்திச் சென்று பணம் பறித்த வழக்கில் கைதான 3 பேர் மீது புகார்கள் குவிகிறது

கோவை ஜூன் 27 மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த குஷால் பிஷ்வாஸ், அலி காதர் ஷேக் ஆகியோர் மதுக்கரையிலும், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஷிவ் குமார் குன்னூரிலும், வேலை செய்தனர். இவர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டு ரயிலில்கோவை வந்தனர் .பின்னர் அவர்கள் காந்திபுரம் பஸ் நிலையம் செல்ல கோவை ரயில் நிலையம் முன் ஆட்டோவை வாடகைக்கு எடுத்தனர் .ஆனால் அவர்களை பஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லாமல் ஆவாரம் பாளையம் மேம்பாலம் பகுதிக்கு அழைத்துச் சென்று மிரட்டி 3 பேரும் பணம் பறித்தனர். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர்களான உக்கடத்தைச் சேர்ந்த முகமது அசாருதீன் ( வயது 25) தென்னம்பாளையத்தைச் சேர்ந்த தவுபல் பாஷா ( வயது 29) செல்வபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ( வயது 33) ஆகியோரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். விசாரணையில் ரயில் அவர்கள் 3 பேரும் வட மாநிலத்தைச் சேர்ந்த மேலும் பலரை இதேபோல கடத்திச் சென்று பணம் பறித்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர்கள் மீது மேலும் புகார்கள் குவிக்கிறது. எனவே அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.இது தொடர்பாக கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது இந்த 3 பேரால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்யலாம் என்றுபோலீசார் கூறினார்கள்.