ஒருவர் படுகாயம் .கோவை ஜூன் 26 கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள நல்லி கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது 38) இவர்அரசு போக்குவரத்து கழகம் சுங்கம் கிளையில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.நேற்று இவர் பணியில் இருந்த அரசு டவுன்பஸ் கோவை ரயில் நிலையத்திலிருந்து சோமையம்பாளையம் சென்று கொண்டிருந்தது. இடையர்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது மற்றொரு தனியார் பஸ், அரசு பஸ்சை முந்த முயன்றது.இதனால் ஏற்பட்ட தகராறில் சத்தியமங்கலம், சி.கே.பாளையத்தைச் சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் சிவகுமார் ( வயது 27) அரசு பஸ் கண்டக்டர் திருமூர்த்தியை தகாத வார்த்தைகளை பேசி கீழே பிடித்து தள்ளினார்.பின்னர் அவரை காலால் உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் திருமூர்த்தி காயம் அடைந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது .சப் இன்ஸ்பெக்டர் பிரவீன் சம்பவ இடத்திற்கு சென்று தனியார் பஸ் கண்டக்டர் சிவகுமாரை கைது செய்தார் ,இவர் மீது 3 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0