வாடகைக்கு குடியிருக்கும் வீட்டில் மோதல் : 3 பேர் காயம்

கோவைஜூன் 27 கோவை போத்தனூர் அண்ணாபுரம், ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் அன்புராஜ் இவரது மனைவி வாசுகி (வயது 32)இவரது வீட்டில் ஜோசப் (வயது 60) அவரது மனைவி ஜான்சிராணி ( வயது 55 )ஆகியோர் வாடகைக்கு குடியிருந்துவருகிறார்கள்.குடிநீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில்இவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.இதில் 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது .இவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாகவீட்டின் உரிமையாளர் வாசுகி கொடுத்தபோத்தனூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் ஜோசப் ( வயது 60) அவரது மனைவி ஜான்சிராணி (வயது 55 )ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இதே போலவாடகைக்கு குடியிருக்கும் ஜோசப் கொடுத்த புகாரின் பேரில் வீட்டின் உரிமையாளர் அன்புராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.