கோவைஅக்டோபர் 15கோவை அருகே உள்ள சின்னியம்பாளையம்,கமலம் நகரைசேர்ந்தவர் பாலகிருஷ்ணன். தனியார் நிறுவன ஊழியர் .இவரது மனைவி ஜோதி. இவர்களின் மகன் ஹர்சன் (வயது 5) அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 1-ம் வகுப்பு படித்து வந்தான் .நேற்று மாலை ஜோதி தனது மகன் ஹர்சனை கடைக்கு அழைத்துச் செல்வதற்காக அவனது கையைப் பிடித்துக் கொண்டு வந்தார். அவர்கள் சின்னியம்பாளையம் பகுதியில் அவிநாசி ரோட்டில்தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக மணல் பாரம் ஏற்றுக் கொண்டு வேகமாக வந்த ஒருலாரி திடீரென்று சிறுவன் மீது மோதியது .இதில் லாரியின் சக்கரத்துக்குள் சிக்கி ஹர்சன் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தான். தாய் கண் முன் இந்த துயர சம்பவம் நடைபெற்றதால் மகனின் உடலை பார்த்து தாய் கதறி அழுத காட்சி பரிதாப இருந்தது..இதை அறிந்ததும் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர் .இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீஸ்இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சம்பவ இடத்துக்கு வினந்து சென்று சிறுவனின பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் குறித்துசெட்டிபாளையம் பக்கம் உள்ள கள்ளபாளையத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் செல்லதுரை ( வயது 43) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





