பெயிண்ட் அடிக்கும் போது தவறி விழுந்து முதியவர் சாவு

கோவை செப்டம்பர் 17 கோவை சிங்காநல்லூர், பாரதிபுரம் ,பங்காரு லேஅவுட்டை சேர்ந்தவர் விவேகன் கே .மணி ( வயது 72) பெயிண்டிங் வேலை செய்து வந்தார் .இவர் நேற்று பாரதிபுரத்தில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார் 4 அடி உயர ஸ்டாண்டில் நின்று பெயிண்ட் அடிக்கும் போது திடீரென்று தவறி கிழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது .அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் .இது குறித்து அவரது தங்கை கனகவல்லி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.