விபத்தில் கார் சேதமடைந்ததால் கோவை போலீஸ்காரர் தூக்கு போட்டு தற்கொலை

கோவை செப்டம்பர் 30 திண்டுக்கல்லை சேர்ந்தவர் ராஜரத்தினம் இவரது மகன் புஷ்பராஜ் (வயது 33 )இவர் கோவை புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார் .அங்குள்ள போலீஸ் குடியிருப்பில்குடும்பத்துடன் தங்கி இருந்தார். இவர் கடந்த 26 ‘ஆம் தேதி தனது காரில் சொந்த ஊரான திண்டுக்கல் சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தார். அப்போது இவரது கார் லேசான விபத்தில் சிக்கியது இதில் கார் சேதமடைந்தது.இதனால் மனம் உடைந்த புஷ்பராஜ்அவரது வீட்டில் உள்ள மின்விசிறியில்நேற்று சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மனைவி சுமித்ரா தேவி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.