கோவை செப்டம்பர் 29 கோவை சேரன்மாநகர், 4- வது பஸ் ஸ்டாப் பகுதியில் வசிப்பவர் ஜெயபால் ( வயது 47) பில்டிங் கட்டுமான தொழில் செய்து வந்தார்.. குடிப்பழக்கம் உடையவர் .நேற்று முன் தினம்இவரது மனைவி வேலன்டீனா தனது மகனுடன் மதுரைக்கு சென்று இருந்தார். அப்போதுஜெயபால்செல்போன் வீடியோ காலில் தனது மகனுக்கு போன் செய்து தான் தூக்கில் தொங்கப் போவதாகவும் தூக்கு கயிற்றையும் காட்டினாராம்.பிறகு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார் இது குறித்து பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு அவரது மகன் தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து பார்த்தபோது மின்விசிறியில் சால்வையை கட்டி ஜெயபால் தூக்கில் தொங்கியது தெரியவந்தது .இது குறித்து அவரது மனைவி வேலன்டினா பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





