காவல்துறையினர் விசாரணை, பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு, கோவை சின்னியம்பாளையம் பகுதியில் அவினாசி சாலையை ஒட்டிய இடத்தில் ஸ்ரீ பிளாக் மாரியம்மன் என்ற திருக்கோவில் அமைந்துள்ளது. இன்று காலை கோவில் பூசாரி கோவிலை திறக்க வந்தபோது கோவிலில் உள்ள விநாயகர், இராகு,கேது,எலி வாகனம் உள்ளிட்ட சிலைகள் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து, இது குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஏராளமான பொதுமக்கள் கோவிலில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த காவல் துணை கண்காணிப்பாளர் தங்கராமன், சூலூர் காவல் ஆய்வாளர் லெனின் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் விசாரணை நடத்தினார்கள். கோவிலை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கோவிலில் பாதுகாப்பிற்காக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0