கோவை செப்டம்பர் 13கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் அரசு பஸ் நிலையம் எதிர்புறம் உள்ள ரோட்டில் நேற்று நடந்து சென்ற ஒரு பெண் மீது அந்த வழியாக வந்த ஒரு வேன் மோதியது .இதில் அந்தப் பெண் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார் .இதுகுறித்து மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.விசாரணயில் அந்தப் பெண்ணின் பெயர் லலிதா ( வயது 67) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக வேன் ஓட்டி வந்த சிவகங்கை மாவட்டம், கூத்து குளத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் ( வயது ) 22 என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0