வால்பாறை சோலையாறு அணை இரு மதகுகள் திறப்பு கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்டம் வால்பாறையில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணையின் நீர் வரத்து அதிகரித்து மளமளவென்று நேற்றையதினம் சோலையாறு அணையின் நீர்த்தேக்கங்கள் கொள்ளளவான 160 அடியை எட்டியது அதைத் மேலும் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் நேற்று நள்ளிரவு அணையின் முழு கொள்ளளவான 165 அடிக்கு 163.60 அடி உயர்ந்ததால் அணையின் பாதுகாப்பு நலன் கருதி இன்று அதிகாலை மூன்று மணியளவில் இரண்டு மதகுகள் வழியாக 236.45 கன அடி நீரும் அதேபோல சேடல் வழியாக 1779.98 கன அடி நீரும் மொத்தம் 2466.79 கன அடி
திறந்து விடப்பட்டு கரையோர பகுதி பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டி கோவை மாவட்ட ஆட்சித்தலைவரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மேலும் அணைக்கு நீர்வரத்து 6279.17 கன அடியாக இருந்து வரும் நிலையில் மழையளவு 87 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது