கோவை ஜூன் 14 கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் ஜெசீஸ் உதயராஜ் ஆகியோர் நேற்று ரத்தினபுரி ,ரூட்ஸ் பாலம் அடியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில்நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 27 கிராம் உயர்ரக கஞ்சா, 3.5கிராம் போதை பொருள் (மெத்தம் பெட்டமின்) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர்ரத்தினபுரி கருணாநிதி வீதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கோகுல் (வயது 25) என்பது தெரியவந்தது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0