குடிபோதையில் பாலத்தில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

கோவை அக்டோபர் 29 சிவகங்கை மாவட்டம் புது குடியைச் சேர்ந்தவர் காளீஸ்வரன் ( வயது 33) இவர் துடியலூர் என்.ஜி.ஜி. ஓ. காலனி பகுதியில்மனைவியுடன் தங்கியிருந்துகூலி வேலை செய்து வந்தார். நேற்று இவர் ஸ்டேட் பேங்க் காலனி,சித்ரா நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார்..மது அருந்திவிட்டுகுடிபோதையில் அங்குள்ள கருப்பராயன் கோவில் பாலத்தில் நடந்து சென்றார்.அப்போது திடீரென்று நிலைதடுமாறி 10 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். இதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர் .அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து அவரது மனைவி நித்யா துடியலூர் போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.