தீபாவளி தினத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்து 2 பேர் சாவு

கோவை அக்டோபர் 22 கோவை சிங்காநல்லூர் ஆனையன் காடு ரோடு ,மார்க்கெட் வீதி,.,சிஎம்சி காலனியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி ( வயது62) குடிப்பழக்கம் உடையவர்.இவர் 72-வது வார்டில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.நேற்று முன்தினம் தீபாவளி தினத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்து வீட்டில் இறந்து கிடந்தார் இது குறித்து அவரது மகன் சுந்தரம் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் இதே போல ஒடிசாவை சேர்ந்தவர் பிரதீப் நாயக் ( வயது 25 )இவர் பீளமேடு, சேரன்மாநகர் விக்னேஷ் நகரில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தார் இவரும் குடிப்பழக்கம் உடையவர். தீபாவளி தினத்தன்று அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டுஅங்குள்ள புது கட்டிடம் அருகே மயங்கி கிடந்தார் அவரைசிங்காநல்லூர் இ எஸ் ஐ மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு அவர்ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் .இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.