கோவை அக்டோபர் 17 கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் ராஜ்.குடிப்பழக்கம் உடையவர். இவரது மனைவி கீதாஞ்சலி ( வயது 26)இவர் தனது கணவரிடம் தீபாவளிக்கு சேலை வாங்கித் தருமாறு கூறினாராம்.இதனால் இவர்களுக்குஇடையே தகராறு ஏற்பட்டது இதில் ஆத்திரமடைந்த பிரதீப் ராஜ் அவரது மனைவியை கீழே பிடித்து தள்ளி வயிற்றில் மிதித்தார்.பின்னர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடிவிட்டார் இது குறித்து கீதாஞ்சலி ஆர். எஸ். புரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்த பிரதீப் ராஜை தேடி வருகிறார்கள்,

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





