கோவை மாவட்டம் சிறுவாணி அணையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அணையின் நீர்மட்டம் 43.13 அடி வரை உயர்ந்து முழு கொள்ளளவை நெருங்கியது. அணையின் அடிவார பகுதியில் 79 மி.மீ மற்றும் அணைக்கட்டு பகுதியில் 147 மி.மீ அளவிலான மழை பதிவாகி உள்ளது.இதன் விளைவாக அணையின் நீர்மட்டம் அதன் வரையறுக்கப்பட்ட கொள்ளளையான 44.61 அடியை நோக்கி வேகமாக உயர்ந்து வருகிறது.
தற்போது பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக வரையறுக்கப்பட்ட 101.40 MLD அளவை விட 99.76 MLD தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது. அணையின் நீர்மட்டம் விரைவில் முழுமையாக நிரம்பும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.இன்று மதியத்திற்குள் அணையின் முழு கொள்ளளவு எட்டும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.