வால்பாறையில் காற்றுடன் பெய்த கனமழையால் பள்ளி மேற்கூரை தூக்கி வீசப்பட்டு சேதம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 29 ஆம் தேதியன்று பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வால்பாறை அருகே  முருகாளி எஸ்டேட் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மேற்க் கூரை தூக்கி வீசப்பட்டதால் சேதமடைந்தது இதனால் அப்பள்ளி மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட ஹைடெக் லேபும்  சேதமடைந்துள்ளது இந்நிலையில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதாலும் வரும் ஜூன் 2 ஆம் தேதியன்று பள்ளி மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்