கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர் கைது

கோவை அக்28 கோவை கவுண்டம்பாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரவீன் நேற்று அங்குள்ள சேரன் பூங்கா பகுதியில் ரோந்துசுற்றி வந்தார் அப்போது அங்கு மறைவான இடத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 1 கிலோ 400 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள் ரத்தினபுரி கண்ணப்பன் நகர் ,ஆர். ஜே. நகரை சேர்ந்த ஸ்ரீஜித் ( வயது22) கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ரமேஷ் குமார் (வயது 20 )என்பது தெரியவந்தது இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.