கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வெள்ளி பாளையம் ரோட்டில் உள்ள ரங்கராயன் ஓடையை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மனைவி கருப்பாயி ( வயது 98 )இவர் மகன் வீட்டில்வசித்து வந்தார். இவருக்கு பீடி குடிக்கும் பழக்கம் இருந்தது .இந்த நிலையில் நேற்று பீடி குடித்துவிட்டு தூங்கிவிட்டார் பீடியில் உள்ள தீ படுக்கையில் பட்டு தீ பிடித்தது இதில் அவரது உடல் முழுவதும் கருகி அதே இடத்தில் இறந்தார். இது குறித்து அவரது மகன் காளிமுத்து ( வயது 67) மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சின்னக்காமண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0