கோவை ஜூன் 17 கோவை பீளமேடு, எல்லைத் தோட்டம் ரோடு பாலகுரு கார்டனை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் ( வயது 52) தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள ஸ்டீல் கம்பெனியில் வெல்ட ராக வேலை பார்த்து வந்தார். நேற்று தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென்றுமின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்..இவரை சிகிச்சைக்காகசிங்காநல்லூர் இ. எஸ். ஐ. மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து அவரது மகன் விஷ்ணுஸ்ரீ பீளமேடு போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
