பட்டப்பகலில் கடையில் புகுந்து பணம் திருட்டு

கோவை ஆகஸ்ட் 16 கோவை செல்வபுரம் பைபாஸ் ரோட்டில் உள்ள பழனியப்பா நகரை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 64) இவரது வீட்டின் முன்பகுதியில் பழைய பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார்.நேற்று மதியம் இவர் வீட்டுக்கு சாப்பிட சென்றார்.திரும்பி வந்து பார்த்தபோது கடை மேஜை டிராயரில் இருந்த 33 ஆயிரத்து 500ரூபாயை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து மூர்த்தி செல்வபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.