கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் முந்தா மோனிகாதேவி தம்பதியரின் 7 வயது மகள் ரோசினியை வீட்டின் முன்னே சிறுத்தை கவ்வி தூக்கிச் சென்ற நிலையில் சனிக்கிழமையன்று சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது இச்சம்பவத்தை தொடர்ந்து அந்த சிறுத்தையை பிடிக்க வனப்பகுதியை யொட்டி கூண்டு ஒரு கூண்டும் மற்றும் இரண்டு கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டது அதைத்தொடர்ந்து மீண்டும் சிறுமியை தாக்கிய குடியிருப்பு பகுதியின் அருகே மற்றுமொரு கூண்டு வைக்கப்பட்டு அதனருகேயும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இரண்டு கூண்டுகளிலும் இரையும் வைக்கப்பட்டு வால்பாறை வனச்சரக அலுவலர் தலைமையில் வனத்துறையினர் மற்றும் பணியாளர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் எனவே விரைவில் அந்த சிறுத்தை கூண்டில் சிக்குவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது இதனால் அப்பகுதி பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0