வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றம் புறக்கணிப்பு.கோவை ஜூன் 16தமிழ்நாடு – புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டு குழு சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதில் கூறியிருப்பதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சக்கரவர்த்தி அவர்கள் சமூக விரோதிகளால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு வன்மையாக கண்டிக்கிறது. வழக்கறிஞர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது, கொலை செய்யப்படுவது நடைபெற்று வருகிறது. ஆகையால் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற கோரி பல போராட்டங்களை ( ஜெ. ஏ.ஏ. சி ) நடத்தியுள்ளது. தமிழக முதல்வர், சட்ட அமைச்சர் உள்ளிட்ட அனைவரையும் சந்தித்து வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றிட வற்புறுத்தி கேட்டுக் கொண்டோம். இதுவரை தமிழக அரசு நமது கோரிக்கையை செவி சாய்க்க வில்லை. ஆகையால் சோளிங்கர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சக்கரவர்த்தி சுட்டுக் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றிட வற்புறுத்தியும் இன்று (திங்கட்கிழமை) ஒருநாள் வழக்கறிஞர்கள் தங்கள் பணியிலிருந்து விலகி இருப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் அனைவரும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழுவின் வேண்டுகோளை ஏற்று நீதிமன்ற பணியில் இருந்து இன்று விலகி இருக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதை யடுத்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களும் இன்று ஒரு நாள்நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பிற மாவட்டங்களிலும் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போரில் ஈடுபட்டனர்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0