கோவை ஜூன் 5 கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள மேடூரை சேர்ந்தவர் கவுதம் குமார் ( வயது 29)பி.இ. பட்டதாரி. இவர் தற்போது கோவை அருகே உள்ள செங்காளி பாளையத்தில் வசித்து வருகிறார். இவருக்கு இடிகரையை சேர்ந்த ஜெயபிரகாஷ் அவரது மனைவி வத்சலா தேவி, பிரகாஷ் ,அவருடைய மனைவி ரேகா மற்றும் சரவணகுமார் ஆகியோர் அறிமுகமானார்கள். அவர்கள் 5 பேரும் தங்களுக்கு அரசு உயர் அதிகாரிகள் பலரை தெரியும். தற்போது இந்து சமய அறநிலைய துறையில் அரசு வேலை காலியாக உள்ளது .அதற்கு ரூ. 18 லட்சம் கொடுக்க வேண்டும் .அந்த தொகையை நீங்கள் ஓய்வு பெறும் போது வட்டியுடன் சேர்த்து பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். அதை நம்பிய கவுதம் அவர்களிடம் 2022- ஆம் ஆண்டு ரூ. 18 லட்சம் கொடுத்தார். உடனே அவரை மதுரை வரவழைத்து நெல்லை மணி மூர்த்தீஸ்வரத்தில்உள்ள விநாயகர் கோவிலில் உதவி செயற்பொறியாளர் பணி ஒதுக்கப்பட்டதாக பணிநியமான ஆணையை கொடுத்தனர். அதில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் சின்னம் மற்றும் அதிகாரியின் கையெழுத்து இருந்தது .உடனே கவுதம் குமார் தனக்கு நெல்லையில் வேலை வேண்டாம். கோவையில் உள்ள கோவிலில் வேலை வாங்கிக் கொடுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு அவர்கள் ரூ 5 லட்சம் கொடுத்தால் பணியிட மாறுதல்செய்து கொடுப்பதாக கூறியுள்ளனர். அதை நம்பி அவர் ரூ 5 லட்சம் கொடுத்தார். ஆனால் அவருக்கு பணி மாறுதல் வாங்கி கொடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கவுதம் குமார் இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியிடம் விசாரித்த போது இந்து சமய அறநிலைத்துறையில் யாரையும் பணிக்கு நியமிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கவுதம் புகார் உடனே ஜெயபிரகாஷ் உள் பட 5 பேரையும் சந்தித்து பணத்தை தருமாறு கேட்டார் .ஆனால் அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. இதுகுறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்தார். விசாரணையில் அவர்கள் 5 பேரும் சேர்ந்து கவுதம் குமார் உட்பட 3 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ64 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. உடனே ஜெயப்பிரகாஷ் மற்றும் பிரகாஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர் .அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான வத்சலா தேவி, ரேகா, சரவணகுமார் ஆகியோரை தேடி வருகிறார்கள்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0