கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலின் பின்புறம் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக சுந்தராபுரம் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போத்தனூர் காந்திஜி ரோட்டை சேர்ந்த சரவணன் (வயது 42) ரவிக்குமார் ( வயது 54 ) வெள்ளலூர் சச்சிதானந்தம் ( வயது 47 )காந்திஜி ரோடு சுப்பிரமணி (வயது 51) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட ரூ.4600 பணமும் சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








