கோவை மே 9 கோவை சரவணம்பட்டி, ரெவென்யு நகரை சேர்ந்தவர் அரவிந்த். இவரது மகள் ரபினா ஸ்ரீ ( வயது 25) பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்துவிட்டு யு.பி.எஸ்.சி தேர்வு எழுதுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 8- 9 – 2024 அன்று இவர் அரவிந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .கருத்து வேறுபாடு காரணமாக கணவர் விட்டு பிரிந்து சென்று விட்டார் .இந்த நிலையில் மன அழுத்தத்துடன் இருந்த ரபினாஸ்ரீ இதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார் .இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக மருந்துகளை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தனர் .இது குறித்து அவரது தாயார் சித்திரைக்கனி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0