140 ரவுடிகள் வெளியேற்றம். கோவை ஜூன் 18 கோவை மாநகர பகுதியில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க போலீசார் தினமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .மேலும் 24 மணி நேர ரோந்து பணியை போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் படி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் .இது தவிர பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த ரவுடிகளின் பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டது .அதில் 140 ரவுடிகள் கோவை மாநகரத்தை விட்டு கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர் .அவர்கள் கோவைக்குள் வருவதை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் .இது தவிர பாலியல் புகார் போதை பொருட்கள் விற்பனை, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீதுகுண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்து வருகிறது.இதன் காரணமாக கோவை மாநகரில் குற்றங்கள் வெகுவாக குறைந்து வருகிறது. இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:- கோவை மாநகர பகுதியை விட்டு 140 ரவுடிகள் வெளியேற்ற பட்ட பின் குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்து வருகிறது .கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை நடைபெற்ற குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை குறைவு .இது தவிர கடந்த 5 மாதத்தில் மட்டும் 100 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயந்துள்ளது .இதில் பாலியல் புகார், போதை பொருட்கள் கடத்தியது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அதிகமாக உள்ளனர். மாநகரப் பகுதியில் அமைதியை நிலைநாட்டவும், குற்றங்களை குறைக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்..

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0