கோவையில் மிகவும் பிரசித்தி பெற்ற, புலியகுளம் புனித அந்தோனியார் தேர் திருவிழா

கோவையில் மிகவும் பிரசித்தி பெற்ற, புலியகுளம் புனித அந்தோனியார் தேர் திருவிழாவை முன்னிட்டு, அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் கோவை சி.எம்.ஸ்டீபன்ராஜ் தலைமையில் புலியகுளத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஏழை எளிய தாய்மார்கள் 200 பேருக்கு விலை அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கோவை மாநகர மாவட்ட மகளிர் அணி தலைவி ஜி.ஜோஸ்பின்மெர்சி அனைவரையும் வரவேற்று விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அவரது சொந்த செலவில் இனிப்புகளும் வழங்கினார். மாநில மகளிர் அணி தலைவி ஐ.கரோலின் விமலாராணி, கௌரவத் தலைவர் பி.எஸ்.ஸ்டீபன், கௌரவ ஆலோசகர்கள் எஸ்.கணேசன், ஏ.லியோ, இரா.புகழேந்தி, லயன் பி.அருள் டி’சில்வா, மெர்சி, மகளிர் சுய உதவி குழு தலைவி ஐ.பிரான்சினா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் விழாவில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும், ஏழை எளிய தாய்மார்கள் 200 பேருக்கு விலை அரிசி மற்றும் காய்கறிகளை திரைப்பட. தயாரிப்பாளர் ,சமூக ஆர்வலர், கருணை உள்ளத்தோடு தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு உதவிக்கரம் புரிந்து வரும் “ஜனங்களின் பிரியன்” என்ற விருதைப் பெற்றவருமான திரைப்பட நடிகர் பிரதீப் ஜோஷ் வழங்கி இருந்தார். சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மாநகர மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை சேது கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர் ப.மாணிக்கம் தமிழ் அமுதம் காளிதாஸ் அறப்பணி மையத்தின் தலைவர் தமிழ் அமுதம் அய்யாசாமி நேதாஜிபுரம் இலக்கிய வட்டத்தின் நிறுவனர் பட்டிமன்ற பேச்சாளர் கவிஞர் மூடாரம் மணிகண்டன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 54 ஆவது வட்ட பிரதிநிதி கே.சிவக்குமார், திராவிட சூரியன் நற்பணி இயக்கத்தின் செயலாளர் ராமநாதபுரம் பகுதி கழக மாணவர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் பி.பகலவன், துணைச்செயலாளர் எம்.குகன், தி.மு.க இளைஞரணி சேர்ந்த எஸ்.முகேஷ் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். பத்தாம் வகுப்பு தேர்வில் 500க்கு 468 மதிப்பெண்கள் பெற்ற மாணவி எம் மகாலட்சுமிக்கு சிறப்பு விருந்தினர்கள் கதர் ஆடை அணிவித்து கல்வி உபகரணங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். நலம் மையத்தின் செயற்குழு உறுப்பினர் எஸ்.கிறிஸ்டி மோனிஷா நன்றி கூறினார்