நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள்
குறைதீர்க்கும்
கூட்டத்தில்,
ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை
பட்டா, முதியோர், விதவை, கல்வி உதவி தொகை, வங்கி கடன், சாலை வசதி உள்ளிட்ட
பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 159 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள்
கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை
அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட
ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், முன்னாள் படைவீரர்
நலத்துறையின் சார்பில், முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து முன்னாள் படைவீரர்
எம்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களின் மகள் ரினிஷாவிற்கு திருமண மானியத்தொகை
ரூ.25,000/-த்திற்கான ஆணையினையும், முன்னாள் படைவீரர் தாமோதரன் அவர்களின்
மனைவி திருமதி ரதி என்பவருக்கு மாதாந்திர நிதியுதவித்தொகை ஜீலை 2025 முதல்
ரூ.4,000/- பெறுவதற்கான அனுமதி ஆணையினையும், மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை
நிதியிலிருந்து 1 நபருக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்காக ரூ.20,000/-த்திற்கான
காசோலையினையும்,
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில்,
1 பயனாளிக்கு ரூ.650/- மதிப்பில் கண்கண்ணாடி மற்றும் மடக்குச்சியினையும் மாவட்ட
ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், சமூக பாதுகாப்பு
திட்டம் (தனித்துணை ஆட்சியர்) ராதாகிருஷ்ணன், முன்னாள் படைவீரர் நலத்துறை
உதவி இயக்குநர் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்
கண்ணன் (கணக்குகள்), மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் உட்பட பலர்
கலந்து கொண்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0