கோவை மே 7 ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்தவர் தேவேந்திர சிங் ( வயது 29)இவர் குடும்பத்துடன் நேற்று கோவைக்கு சுற்றுலா வந்திருந்தார்,ஆர். எஸ்.புரம், லாலி ரோடு -மேட்டுப்பாளையம் ரோடு சந்திப்பில் குடும்பத்துடன் நடந்து சென்றார் .அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் தீபேந்திர சிங்கின்தாயார் கையில் இருந்த பையை கொள்ளையடித்து கொண்டு தப்பி ஓடி விட்டார் .அதில் 20 கிராம் எடைகொண்ட 2 தங்கச் செயின், ஒரு செல்போன், ஸ்மார்ட் வாட்ச், ரூ 9,500 பணம் இருந்தது. இது குறித்து திபேந்திர சிங் . ஆர் .எஸ் . புரம். போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் செல்லதுரை வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்.பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0