கோவைஜூன் 6 கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் செல்லதுரை (வயது 37) தொழிலதிபர். இவர் சென்னை எழும்பூரில் சொந்தமாக மகளிர் விடுதியும் நடத்தி வருகிறார். இதற்காக சென்னையில் தங்கி உள்ளார். அவருடைய குடும்பத்தினர் குனியமுத்தூரில் வசித்து வருகிறார்கள் .இந்த நிலையில் சென்னை எழும்பூரைச் சேர்ந்த வீட்டு உள் அலங்கார வேலை செய்யும் சுரேஷ் (வயது 33) என்பவர் செல்லதுரைக்கு அறிமுகமானார் .அவரிடம் செல்லதுரை என் விடுதியில் சில அலங்கார வேலைகள்செய்ய வேண்டும் என்று கூறி அழைத்து வந்தார். அவரது வேலை பிடித்து போனதால் செல்லதுரை சுரேசை குனியமுத்தூரில் உள்ள தனது வீட்டிலும் சில உள் அலங்கார வேலைகளை செய்யுமாறு கூறினார். அதன்படி அவர் அவ்வப்போது குனியமுத்தூருக்கு வந்து செல்லத் துரையின் வீட்டில் அலங்கார வேலை செய்து வந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரம் பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள், பணம் ரூ 21 லட்சம் ஆகியவற்றை திருடி உள்ளார். இதன் மொத்த மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு மேல் இருக்கும். இந்த நிலையில் பீரோவில் இருந்த நகை – பணம் திருட்டு போனதை பார்த்த அதிர்ச்சி அடைந்து செல்லதுரை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பிறகு போலீசார் வழக்கு பதிவு செய்தனர் .இந்த வழக்கில் துப்பு துலக்க குனியமுத்தூர் உதவி கமி ஷனர் அஜய் தங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரண நடத்தியதில் செல்லதுரை வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக நகை – பணத்தை கொள்ளை அடித்தது சுரேஷ் என்பது தெரிவந்தது. தனிப்படைபோலீசார் சென்னையில் பதுங்கி இருந்த சுரேசை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 50 லட்சம்மதிப்புள்ள நகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.கொள்ளையனை கைது செய்து நகை, பணத்தை மீட்க தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் பாராட்டினார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0