கோவை ஆகஸ்ட் 20, கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய பகுதியில் சுமார் 53 வயது பெண்ணை கடந்த 2019-ம் ஆண்டு கொலை செய்த குற்றத்திற்காக மதுக்கரை பாலத்துரையை சேர்ந்த நடராஜ் மகன் மனோஜ் குமார் (வயது30) என்பவர் மீது மதுக்கரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு,இவ்வழக்கின் விசாரணை 5 – வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை நேற்று முடிவு பெற்று குற்றவாளி மனோஜ் குமாருக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 1000/- அபராதம்விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற சிறப்பு உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார் ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். கார்த்திகேயன் பாராட்டினார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0