கோவை மே 31 கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவைசேர்ந்தவர் சிவ குமரேசன் ( வயது 44) காய்கறி வியாபாரி.இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் இவருக்குகடந்த 20 20 ஆம் ஆண்டுஅதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி அப்போது 9-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது கொரோனா காலகட்டம் என்பதால் சிறுமி வீட்டில் இருந்து படித்து வந்துள்ளார் .அவர் சிறுமியுடன் நெருங்கி பழகியுள்ளார். இதை யடுத்து அவர் ஆசை வார்த்தை காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து வேறு யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டியதாகவும் தெரிகிறது .இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டது .இதனால் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர் .அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிவ குமரேசனை கைது செய்தனர். இதற்கிடையே துடியலூர் காவல் நிலையம் மாநகர போலீசுடன் இணைக்கப்பட்டது.இதனால் இந்த வழக்கும் கோவை மத்திய பகுதிஅனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி தலைமையில் போலீசார் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினர். வழக்கு விசாரணை கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது . வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி யம்மாள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வியாபாரி சிவ குமரேசனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ 20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அபராதம் செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்..

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0