கோவை : கோர்ட்டுகளில் இ- பைலிங் முறை கட்டாயம் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதில் பல்வேறு நடைமுறை சிக்கல் மற்றும் காலதாமதம் உள்ளிட்ட காரணங்களால் முழுமையாக சீர் செய்யும் வரை கட்டாய இ -பைலிங் முறையை அமுல்படுத்த கூடாது என்று வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தினார்கள். இதனால் கோவை கோர்ட்டுகளில் வழக்கு விசாரணைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. தமிழ்நாடு புதுச்சேரி மாநில வக்கீல்கள் கூட்டு கமிட்டியினர் சென்னையில் ஐ கோர்ட் நீதிபதிகளை சந்தித்து பேசினர். இதை தொடர்ந்து கட்டாய இ -பைலிங் முறையை நிறுத்தி வைத்து சென்னை ஐகோர்ட் அறிவித்தது. இதனால் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பணிக்கு திரும்பினார்கள். வழக்கு விசாரணைகள் இனி துரிதமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








