மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ரூ.81.75லட்சம் உண்டியல் காணிக்கை

கோவை ஜூன் 28 கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் முருக பக்தர்களால் 7-வது படை வீடு என்று போற்றப்படுகிறது. இந்த கோவிலில் மாதம்தோறும் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று கோவிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் உள்ள பணம், தங்கம் உள்ளிட்டவற்ற என்னும் பணி நடைபெற்றது. இதில் கோவில் நிரந்தர உண்டியலில் ரூ. 76 லட்சத்து 52 ஆயிரத்து 870 – ம்,கோசாலை உண்டியலில் ரூ.3 லட்சத்து 57 ஆயிரத்து 131-ம் திருப்பணி உண்டியலில் ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 347 – ம் உப கோவில் உண்டியலில் ரூ.43,891 உட்பட மொத்தம் ரு81 லட்சத்து 82 ஆயிரத்து 239 – ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் 115 கிராம் தங்கம், 5.1/ 4 கிலோவெள்ளி,10 கிலோ பித்தளை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உண்டியல் எண்ணிக்கையின் போது கோவில் நிர்வாகிகள், அறங்காவலர்கள் பணியாளர்கள் உடன் இருந்தனர்.