கல்லூரி விடுதியில் மருத்துவ மாணவி மர்ம சாவு.

கோவை ஜூலை 7 நாமக்கல்லை சேர்ந்தவர் பவபூரணி ( வயது 28) எம்.பி.பி.எஸ். படித்து முடித்துவிட்டு மயக்கவியல் துறையில் முதுகலை (எம்.டி) படிப்பிற்காக கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருந்தார். இதற்காக அவர் அந்த கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்து படித்து வந்தார். நேற்று காலையில் அந்த மாணவி விடுதி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சென்றார் .நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை .இதனால் அவருடைய அறையில் தங்கி இருந்த மாணவிகள் கழிவறைக்கு சென்று கதவை தட்டினர். பலமுறை தட்டியும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் விரைந்து சென்று கதவை உடைத்து பார்த்தபோது அங்கு அந்த மனைவி பிணமாக கிடந்தது தெரியவந்தது. இது குறித்து பீளமேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பவ பூரணி எப்படி உயிரிழந்தார் ?என்பது தெரியவில்லை.. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மாரடைப்பால் இறந்தாரா ?என்பது தெரியவில்லை .சாவு மர்மம் குறித்து பிளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..