கோவை ஜூலை 7 திண்டுக்கல் மாவட்டம் , தாடிக்கொம்பு, கே கே நகரை சேர்ந்தவர் வீரமணிகண்டன். இவரது மனைவி மாரியம்மாள் ( வயது 45) இவர் நேற்றுதனது தாயாருடன் உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்துசாய்பாபா காலனி, மேட்டுப்பாளையம் ரோடு செல்லும் தனியார் டவுன் பஸ்சில் ஏறினார். அப்போது யாரோ இவரது மணி பரிசில் இருந்த பணம் ரூ.27 ஆயிரம், செல்போன் மொபட் சாவி ஆகியவற்றைதிருடி சென்று விட்டனர்.இது குறித்து மாரியம்மாள் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0