2 குழந்தைகளுடன் தாய் திடீர் மாயம்

கோவை ஜூலை 24 கோவை ராமநாதபுரம் நாகப்பதேவர் வீதியைச் சேர்ந்தவர் தமிழரசு. இவரது மனைவி தங்கலட்சுமி ( வயது 30) இவர்களுக்கு நிரஞ்சன் ( வயது 6) நித்திகா (வயது 5) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்..கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 21 டஆம் தேதி தனலட்சுமி தனது இரு குழந்தைகளுடன் எங்கோ மாயமாகிவிட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்துகணவர் தமிழரசு ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார் இன்ஸ்பெக்ட்டர் ராமச்சந்திரன் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.