கோவை ஜூலை 15 கோவை காந்தி பார்க் ,சுந்தர் வீதி ,சி.டி.சி. காலனியை சேர்ந்தவர் தண்டபாணி . இவரது மகன்கார்த்திக் (வயது 28) இவர் கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்துவந்தார்.நேற்று மதியம் வேலை முடிந்ததும் தனது சித்தப்பா மகன் தினேஷ் மற்றும் நண்பர்கள் வசந்த்,மாதேஷ் ஆகியோருடன் தொண்டாமுத்தூர் அருகே உள்ள சித்திரைச்சாவடி தடுப்பணைக்கு குளிக்க சென்றார். தற்போது சித்திரைச்சாவடி தடுப்பணை நிரம்பி வழிந்து வருகிறது. அதில் இறங்கி கார்த்திக் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டு இருந்தார். அப்போது கார்த்திக் திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தார்.இது பற்றி தகவல் அறிந்ததும் ஆலந்துறை போலீசார் மற்றும் தொண்டாமுத்தூர் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தண்ணீரில் இறங்கி ஒரு மணி நேரம் தேடினார்கள் பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டது . பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இது குறித்து ஆலந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0